வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Tuesday, February 16, 2010

மனதைத் திண்ற பூதம்


நொருங்கிய கண்ணாடியின் விம்பங்களில்
தலை சீவுகிறது காலம்

காலபூதம் உனக்குமெனக்குமிடையில்
எழுப்பிய சுவரில் முட்டிமோதுகிறது தும்பி

பனிப்பெய்யும் இரவில் கூதல் காயும் பூனையென
குறிகிப்போகிறது
உன் நினைவுகளுடன் உயிர்

கனவுகள் உதிர்ந்துகிடக்கும் இரவில்
மின்மினிப் பூச்சியின் ஒலிபோல்
ஒட்டிக் கொள்கிறது
உன் மெல்லிய பிரியம்.

நிலவற்ற ஒவ்வொரு இரவும்
அமைதியெனும் பூதம் கொத்திச் செல்கிறது மனது

சீழ்வடிய, சீழ்வடிய
துடைத்தெறியும் காகிதமாச்சு
மனதுள் ஆடும் நினைவுச்சு சுமை.

காற்றில் விளக்கணைய, விளக்கனைய
ஒலியூட்டும் முயற்சியெ
தொடர்கிறது எனக்குள்ளான புன்னகை.

கைதவறிய பிரம்பை
தேடியலையும் குருட்டுக்கிழவனைப் போல்
மனம் நாடியலைகிறது வாழ்வை.

28.08.2006
தானா விஷ்ணு

No comments:

Post a Comment