வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Sunday, June 27, 2010

நிழற்படங்கள்


வெளவால்களும் சிலந்திகளுமாய்
கூடிவாழும் வீடொன்றில்
தொங்கியபடி இனம் தெரியாதொருவனின்
நிழற்படம்
முன்பெப்போதுமே கண்டிராத அந்த முகம்
நன்கு பழகியவனைப் போல்
புன்னகைக்கிறது.

எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின்
தனித்திருப்பது கூடத்தெரியாமல்
புன்னகைக்கும் அந்த உருவம்
என்னுடையதாய் மாறுகின்றது.
நான் திகைத்துத் திரும்புகையில்
சுவர் எங்கும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.

15.12.2008
தானா விஷ்ணு

No comments:

Post a Comment