தானா விஷ்ணு
நித்தியமான மௌனத்தில்
அச்சம் நிரம்பும் இரவில்
விழித்திருக்கும் பூனை விழிகளுள்
அலைந்து கொண்டிருக்கிறது
பறவைகளின் உதிர்ந்த இறகுகளின் உஷ்ணம்.
யாருடைய குரல்களுக்கும்
பதில் தராத இரவு
பூனையின் விழிகளிலிருந்து
தப்பிக்கும் எலிகளின் பிரேரனை மனது.
புறவையின் உதிர்ந்து இறககளை சப்பியபடி
அந்நியமாகிறயது
இரவுகளில் தெரு.
பறவைகள் கொல்லப்படும்
இரவுகளில்
ஆந்தத் தெருக்களில்
பூனைகள் புணர்ந்து கொண்டிருக்கின்றன
காற்றில் படபடக்கின்றன
பறவைகளின் உதிர்ந்த இறகுகள்.
11-04-2006
தானா விஷ்ணு
No comments:
Post a Comment