வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Sunday, January 24, 2010

பூனைகளின் விழிகள் அல்லது பறவைகளின் உதிர்ந்த இறகுகள்

தானா விஷ்ணு

நித்தியமான மௌனத்தில்
அச்சம் நிரம்பும் இரவில்
விழித்திருக்கும் பூனை விழிகளுள்
அலைந்து கொண்டிருக்கிறது
பறவைகளின் உதிர்ந்த இறகுகளின் உஷ்ணம்.

யாருடைய குரல்களுக்கும்
பதில் தராத இரவு
பூனையின் விழிகளிலிருந்து
தப்பிக்கும் எலிகளின் பிரேரனை மனது.
புறவையின் உதிர்ந்து இறககளை சப்பியபடி
அந்நியமாகிறயது
இரவுகளில் தெரு.

பறவைகள் கொல்லப்படும்
இரவுகளில்
ஆந்தத் தெருக்களில்
பூனைகள் புணர்ந்து கொண்டிருக்கின்றன
காற்றில் படபடக்கின்றன
பறவைகளின் உதிர்ந்த இறகுகள்.

11-04-2006
தானா விஷ்ணு

No comments:

Post a Comment